Sunday, January 28, 2018

புலனடக்கம் இல்லா, தவம்!

மனிதர் நல்வழி வாழ வேண்டிய அவசியத்தை விளக்கும் தொன்மையான நீதிநெறி நூல், ஏலாதி.

ஆறு வகை மூலிகைகள் சேர்ந்த மனிதர் உடல் நலம் காக்கும் மருந்தை, ஏலாதி என்பர். அதுபோல, ஆறு வகையான தத்துவங்கள் மூலம் மனிதர் வாழ்வு செழிக்க வழிகாட்டும் நூல் ஏலாதி ஆகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியின் ஒவ்வொரு பாட்டிலும் ஆறு தத்துவங்கள் இருக்கும், அவற்றை வாழ்வில் கடைபிடித்தால், வாழ்வு சிறப்பாகும் என்றனர், நம் முன்னோர்.

காலம் கடந்து தற்கால வாழ்வுக்கும், அதன் பல பாடல்கள் பொருந்துகின்றன, அப்படி ஒரு பாடல் இதோ!

புலன் வழியில் செல்லும் வாழ்க்கையின் துன்பம்.
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை,சால உணர்வார் பெருந்தவம்,
போகாமை, சாலப் புலை.

பிறப்பில்லாப் பெருவாழ்வு தேடுபவர்களின் வாழ்க்கைத்துன்பங்கள், கற்ற கல்வியினாலோ, ஈடுபடும் தியானத்தினாலோ, இறை புகழ் பேசுவதாலோ தீராது, ஐம்புலன்களையும் அடக்கி, மேற்கொள்ளும், தூய்மையான தவத்தால் மட்டுமே, விலகும்.

பிறந்த பிறவியின் துன்பங்கள் விலக, புலனடக்கம் இன்றி, மனதின் எண்ணங்களின் வழியே பிறவியைக் கழிக்கும் மனிதர்களின் இறை நாட்டம், மிகவும் தவறு என்கிறது, ஏலாதி நீதிநெறி நூல்.

No comments:

Post a Comment

Total Pageviews