Saturday, January 27, 2018

ஆசிரியர் இல்லா வகுப்பறை!

எங்கெங்கு நோக்கினும்,  எல்லோரும் 
தன்னிலை கடக்கிறார்கள்!
சுய ஒழுக்கம் மறக்கிறார்கள்.

இயல்பை மீற, எல்லோருக்கும் 
ஒரு காரணம் இருக்கிறது!

நித்தம் ஒரு கூட்டம், 
சமூக வெளியில் தம் 
பக்குவம் காட்ட,

பாயும் ஊடகங்கள், 
ரேட்டிங் இரை தேடுவதில், 
கடமையை மறக்கும் 
அவலம் எங்கினும் !

ஆன்றோரும் சான்றோரும் 
வழி நடத்திய  எம் தேசம்,
இன்று,

ஆசிரியர் இல்லாத 
வகுப்பறை!

கண்டிப்பார் இல்லா 
காட்டுக்கூச்சல் 
காதைப் பிளந்தாலும்,

விரைவில் ஆசிரியர், 
நிச்சயம் வருவார்!

கையில் பிரம்புடன், கண்டிப்பாக..!









No comments:

Post a Comment

Total Pageviews