Thursday, January 25, 2018

இப்போது புதிதாக!





இப்போது புதிதாக,
இந்த வினாடி,
தொடங்குவோம், வாருங்கள்!

யார் பெருமை கொண்டாடினாலும், யார் சொந்தம் 
கொண்டாடினாலும், நாம் அதை எண்ணாமல் 
அடிக்கல்லை நாட்டுவோம்!

நாமறிவோம், ஆரம்பத்துக்கும், 
அடிக்கல் நாட்டுவதற்கும்
வராத கூட்டங்கள், 

உயர்ந்தபின், பெருமை பேசும் என்பதை!
அதைப் பற்றி என்னாது, செல்லும் வழியை மனதில்
நிறுத்தினால், எல்லோர்க்கும் நலமே விளையும்!

சுயநலம் விடுத்த 
பொதுநலம் காப்போம்!

கால வெள்ளத்தில் நாம், 
ஒரு துகள் கூட அல்ல, 
என்பதை உணர்ந்து,

மமதையை அழித்து,
மனிதம் போற்றுவோம்!!

No comments:

Post a Comment

Total Pageviews