Thursday, March 21, 2013

தமிழன்



தமிழா!

எங்கே , போகிறது, இந்திய அரசியல் களம்?
அதிரடி மாற்றங்கள் , அடுத்தடுத்து, தமிழக அரசியல் களத்தில்!
எங்கே போயின, ஈழத்தமிழர் பாதுகாப்பு கேடயங்கள்?
என்ன நடக்கிறது , ஜெனிவாவில்?
ஓ! நாம் தமிழ்நாட்டு , தமிழர்களா?
நாம் பிரிந்தே போராடுவோமா , மீனவர் பிரச்னை முதல்,
மாணவர் பிரச்னை வரை !

தமிழன் என்றொரு , இனம் உண்டு!
அவன் உலகை ஆண்டது , அந்த காலம்!
அவனை அவன் ஆண்ட,
லங்கா தேசம்  , ஆள்வது, இந்தக் காலம்!
அவன் தனித்தனியே, பிரிந்து கிடக்கின்றான் இன்று!
அவனிடம் எல்லாம் உண்டு , இல்லாதது, ஒற்றுமை!
அதனால் தான், தமிழன் , தேசம் வாரியாக
சாதி வாரியாக, அரசியல் வாரியாக, பிரிந்து கிடக்கின்றான்!
தமிழகத்திலோ , இன்னும் உச்சம்!
ஆயிரம் பெரியார் வந்தாலும் , ஒழிக்க முடியா துயரம், 
தமிழன் ஒடுக்கப்படுவது! ஒழிக்கப்படுவது!
எங்கே போனது , உலகை ஆண்ட வீரம்?

வாழ்க! தமிழர் ஒற்றுமை!

வளர்க ! தமிழர்  உலகம்!

No comments:

Post a Comment

Total Pageviews