Saturday, March 2, 2013

மூலிகை - சாப நிவர்த்தி





 மூலிகை - சாப நிவர்த்தி 


சித்தர்கள் சொல்லிய வைத்திய முறைகளில், மனிதர்களுக்கு நோய் குணமாக , அவர்தம் உடல் நலம் சீராக, குறிப்பிட்ட மூலிகைச் செடிகளை 
சாப நிவர்த்தி எனும் குறிப்பிட்ட மந்திரம் உச்சரித்து மற்றும் தனிப்பட்ட வழிமுறைகளின் மூலம்  எடுத்து , குறிப்பிட்ட பக்குவத்தில் கொடுத்து வர , நோய் நீங்கி மனிதன் நெடு நாள் சிறப்பாக வாழ்வானாம்!

மனிதர்க்கும் உண்டா சாப  நிவர்த்தி?     

நம்மை வழி நடத்தும் சித்தர்கள் பல முறைகளில் சிறப்பாக, மனிதர்களின் சாப நிவர்த்தி பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவற்றில் எல்லாம் தலையாய அறிவுரையாக, தேர்ந்த குருவின் அருளால் மட்டுமே , அதை அடைய முடியும் என்ற குறிப்புகளைக்  காண முடிகிறது.

தேர்ந்த குருவினை அடைந்து, அவரின் அருளாசியைப் பெற்று, அதன் மூலம் சாப நிவர்த்தி பெறலாம்.

இக்காலத்தில் அது கடினம் என எண்ணினால் , தங்கள் செயல்களில், எண்ணங்களில்,சிந்தனைகளில்  மற்றும் பேச்சுகளில், மற்றவர்க்கு நன்மை செய்யாவிடினும், பொல்லாங்கு மற்றும் தீங்கு நினையாமல் இறை சிந்தனையில் இருந்தாலே, நாம் சாப நிவர்த்தி பெற்று அடையும் நற்பலன்களையெல்லாம்,  இந்த நல்ல எண்ணத்திலான, செயல்களினால் அடைந்து, பெருவாழ்வு வாழலாமாம்!

வணக்கம்!

ஞானக்குமாரன்.






No comments:

Post a Comment

Total Pageviews