Monday, April 15, 2013

கோடை வெப்பம்

கோடை வெப்பம்


இன்னும் சில தினங்களில் கோடை வெப்பம் 100 degree தாண்டுமாம், மதுரை,திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட உள் தமிழ்நாட்டில் , வெப்பம் அதன் உச்சம் தொடுமாம்!

இப்போதே இப்படி என்றால் , இனி வரும் நாட்கள்?

அதனால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க முடியுமா?

உழைப்பாளிகளின் நிலை என்னாகும்?

நண்பர் ஒருவர் ஒரு விஷயம் அடிக்கடி சொல்வார்!

ஒருவர்  வெயிலில் , அலைய வேண்டும் என்பது விதி [ அவருடைய அலுவல் அப்படி ] என வைத்துக்கொண்டாலும், அதை நம் மதியால் வெல்லலாம்!

எப்படி என்கிறீர்களா?

வெயிலின் வெம்மை கடுமையாக இருந்தாலும்,

நாம் தலைக்கு தொப்பி போட்டுகொள்ளலாம், 
நல்ல காலணி அணிந்து கொள்ளலாம் 
கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் 
கதராடை உடுத்திக்கொள்ளலாம் 
அடிக்கடி தண்ணீர் பருகலாம் 

இதன் மூலமாக , நாம் வெயிலின் கடுமையை, நம் மதியினால் வெல்லலாம் என்றார் நண்பர்!

என்ன சரிதானே ?

நன்றி அன்பர்களே!!



No comments:

Post a Comment

Total Pageviews