Friday, May 26, 2017

விட்டு வைக்கலாம் இல்லையா,


எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது, 
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !

ஆயினும்,

நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின் சேவைகள்  தொடர,

விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!

நட்டு வைக்கலாம் இல்லையா, 
இடமெல்லாம்?!

மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!

1 comment:

  1. இறுதி வாக்கியக் காரம்
    உறைத்தது
    அவசியமான அற்புதமான கவிதை
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete

Total Pageviews