Monday, August 22, 2016

மூலிகைக் காற்று

மூலிகைக் காற்று மணக்கும் கொல்லிமலை!





            மனதிற்கும், உடலுக்கும் ஒருங்கே , உற்சாகமும் ஊக்கமும் அளிக்கவல்ல இடங்களில் , மலை சார்ந்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றே, கொல்லிமலை.


  மூச்சு முட்ட பெட்ரோலிய வாகனங்களின் கரியமில மாசுக்காற்றினில் , வாழ்வினைக்கழிக்கும், நகர வாழ்க்கையின் வெகுதூரத்தே, நவீன உலகம் இன்னமும் கைவைக்காத இடந்தனில், அமைந்துள்ளது, கொல்லிமலை!


          மூலிகைக்காற்றினில், இயற்கையை சுவாசித்திட, வாகன மாசுக்கள்  இன்றி , வாகன இயந்திரங்களால் ஏற்படும் இடைவிடா  இரைச்சல் இன்றி, இயற்கையை இயற்கையோடு இணைந்து அனுபவித்திட, வாழ்ந்திட, இதமான தென்றலாகத் தவழ்ந்துவரும் மூலிகைக்காற்றினில், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றிட, மனதில் அமைதி நிலவிட,  

இயற்கை அன்னையின்  அற்புதக் கொடையாம், அரப்பளீஸ்வரர் உறையும் பழம்பெரும் சிவாலயம் கொண்ட,  கொல்லித்தாய் காத்து நிற்கும், அமைதி தவழும் கொல்லிமலை  தரிசிப்போம்! இயற்கையோடு இணைந்து,  நல்லனுபவம் பெறுவோம்! 



செல்லும் வழித்தடம் : 

நாமக்கல் அல்லது சேலம் வழியாகச் செல்லலாம்!

1 comment:

  1. வணக்கம்
    இயற்கை ஒரு அழகுதான் அற்புதமான இடத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Total Pageviews