Thursday, December 26, 2013

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

வணக்கம் !

தொன்மையான பழந்தமிழர் மரபில் நாம் வாழ்ந்தாலும், வழி நடந்தாலும் ,அல்லாவிடினும், நமது வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் ஆங்கிலேயர் வழி வந்த கிருத்துவ வருட கணக்கில் தான் கடைபிடிக்கப்படுகிறது, அத்தகைய நடைமுறைகளின் ஒரு அங்கமாக இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.

ஆண்டுகள் எதனடிப்படையின் கீழ் கணக்கிட்டாலும், அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒன்றுதான், நம்முடைய வயதுகளின், சூழ்நிலைகளின்   அடிப்படையில் அதன் கொண்டாட்டங்கள் அமைந்தாலும், நாம் நம்முடைய சில விட நினைக்கும் அல்லது ஆரம்பிக்க நினைக்கும்  விசயங்களை , ஒரு உத்வேகத்துடன் அந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கும் நாள் தான் இந்த ஆங்கிலேய  புத்தாண்டு தினம். 

இந்த வருடக்கடைசியில் அத்தகைய விசயங்களில் அதிகம் ஈடுபட்டுக்கொண்டு , நான் இதிலிருந்து  புத்தாண்டு தினம் முதல் விடுபட்டுவிடுவேன் என சமாதானம் கூறிக்கொண்டு விட நினைக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுவோர் ஏராளம்.

நாம் நம்முடைய பழம்பெருமை நினைத்து போற்றி, விட்டு விடுதலையாகும் மனமிருந்தால் எத்தகைய அல்செயல்களிருந்தும் எப்போது வேண்டுமானாலும்  விடுபடலாம், நலமுடன் வாழலாம்!

அல்லது ஆரம்பிக்க நினைக்கும் விசயங்களை, நினைத்த அன்றே  ஆரம்பிக்கலாம் அல்லவா?

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

முடிவெடுத்த கணமே, நமக்கு புத்தாண்டு தானே! 

சிந்திப்போம்! பழமை போற்றுவோம்!! பாரம்பரியம் காப்போம்!!!

அன்பன்,

ஞானகுமாரன்.




No comments:

Post a Comment

Total Pageviews