Wednesday, February 14, 2018

தன்னம்பிக்கை புத்தகம் 

ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் . 



உலகில் இன்று, அன்பு, சமத்துவம், கருணை எல்லாம் செல்லாக்காசாகிப் போன தருணத்தில்,  நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் நன்னம்பிக்கை தருவதுபோல், சிலர் தங்கள் நல்ல எண்ணங்களை, உலகின் மேல் தங்களுக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம், செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி ஒருவராக, ஆன்மா வாழ்க்கையானபோது,,!, எனும் நன்னம்பிக்கை நூலின் ஆசிரியர் திகழ்கிறார்.

நம்மில் பலருக்கு, இன்னும் ஆன்மா என்றால் மிக அதிக பயம் உண்டு, 
அது நம்மில் ஒன்றுதான், நம் உணர்வில் ஒன்றுதான், என்று அறியாமல், அதை நமக்கு அந்நியமாகப் பார்ப்பதன் விளைவே, இன்றைய நாகரிக வாழ்வின் இன்னல்கள்.

ஆன்மா என்பது ஏதுமல்ல, நாம்தான் அது, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று சமயங்களில் எண்ணுவோமே, அந்த எண்ணம்தான், 
அந்த சிந்தனையைத் தூண்டுவதுதான் ஆன்மா!

புரிந்துகொண்டால், நம் அளவில் நாம் பக்குவப்படுவோம்!
நாம் பக்குவப்பட்டால், நாம் மட்டுமா, நமது குடும்பம் , உறவுகள், நட்புகள் மற்றும் காணும் மனிதரையெல்லாம், நல்லவற்றின் பால் ஈர்க்க முடியுமே!

அதன்பின்னர், இந்த உலகம், சொர்க்கமாக மாறுமே!
எங்கும் அமைதியும், இன்பமும் தங்குமே!

நீங்களும், இந்த அற்புத அனுபவத்தைப் பெற முடியும்!




ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் .

எனும் நூல் தற்போது, அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது. வாங்கிப் படித்து, மற்றவர்களுக்கும், நல்ல வாழ்க்கையின் நன்மைகளை, நல்வாக்கு தரும் எண்ணங்களின் அருமைகளை, விளக்குங்கள்!

நாளை ஆரம்பிக்க நினைத்ததை இன்றே ஆரம்பித்தால், 
நன்மைகள் இன்றே வந்து சேரும் அன்றோ!

ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் . 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கிட,  கீழே உள்ள இணைப்பை, அழுத்தவும்!


நல்ல எழுத்தை எங்கும் சேர்க்க எண்ணியே, இந்தப்பதிவு!

மனிதமும் மனிதாபிமானமும் செழிக்கட்டும்!

நன்றி!

Gnaana.

1 comment:

  1. வணக்கம்
    உண்மைதான் தாங்கள் சொல்வது போல யாவும் செல்லாக்காசுதான் இந்த நவீன உலகில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Total Pageviews