Saturday, October 5, 2013

மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள்

வணக்கம் அன்பு வாசகருள்ளங்களே! 

தவிர்க்கமுடியாத சூழலால் பதிவுகள் இட  கால தாமதம் ஏற்பட்டதற்கு ,வருந்துகிறேன்.இன்று மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள் பற்றி பார்க்கலாம்.

இன்று நமது பாரம்பரிய சித்த மூலிகை மருத்துவம் , முதல் வைத்திய முறையிலிருந்து மாறி, அலோபதி மற்றும் மற்றைய மருத்துவ முறைகளில் தீர்வு கிடைக்காததால் , மக்களால் நாடப்படும் கடைசி இடத்தில் இருந்தாலும், மீண்டும் நமது சித்த மருத்துவம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் காலம் , விரைவில் மலரும் என்ற நல நம்பிக்கையுடன் , இன்றைய பதிவினை அணுகலாம்.

எந்த மருத்துவ முறைகளிலும் , மருந்துகளுக்கு உரிய வீரியத்தினால், பக்க விளைவுகள் சிறிது இருக்கும், அதிகமாக அலோபதியிலும், குறைவாக சித்த மருத்துவத்திலும் காணப்படும்.

அந்த சிறிய அளவு பக்க விளைவுகளையும்  நீக்கும் விதமாகத்தான் , சித்த மருத்துவர்கள் அந்த முலிகைகளுடன் வேறு சில மூலிகைகள் சேர்த்து, பக்க விளைவுகளை கட்டுப்படுத்திவிடுவர். 

எனவே , எந்த மருந்தையும் அது சித்த மூலிகை மருந்துகளானாலும்  சரி, மருத்துவர் பரிந்துரைத்த காலத்திற்கு மட்டுமே சாப்பிட வேண்டும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என அறிந்த அன்பர்கள் , மருந்திற்கும் இது பொருந்தும் என மனதில் கொள்ள வேண்டும். 

தொடரும்..


No comments:

Post a Comment

Total Pageviews