Friday, May 10, 2013

கோடையில் வீட்டில் இருக்க, முடிய வில்லையா?




அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது, 

வீட்டிலே , இரவு நேரம் சுத்தமாக தூங்க முடிய வில்லை, பகலிலே, கேட்கவே வேண்டாம்!
எல்லோரும் ஏசி வைத்துக்கொள்ள முடியுமா?
அல்லது 
எல்லோரும் தான் குளுகுளு ஊட்டி,கொடைகானல் , 
இல்லை கொல்லி மலை, ஏற்காடு செல்ல முடியுமா?

அந்த சூழலை , குளுமையான , மனதிற்கு இதமான அந்த குளிர் தட்ப நிலையை நாம் இருக்கும் இடத்தில் அனுபவித்தால் , ? 

நினைக்கவே , பரவசம்!
நடந்தால் ?
அற்புதம்!

ஆம், நாம் இருக்கும் இடத்திலேயே  , குளிர் சூழலை உருவாக்குவோம்!
ஏசி இல்லாமலே!

எப்படி?

கொஞ்சம் தண்ணீர் , கொஞ்சம் முயற்சி , அவ்வளவே!
முதலில் , நம் வீட்டு சன்னல்!

வீட்டில் உள்ள பாய் , இல்லை என்றால் படுக்கை விரிப்பு எடுத்து, நன்கு தண்ணீரில் ஊர வைத்து, சன்னலில் கட்டி விடுங்கள்!

தரையில் தண்ணீர் ஊற்றி , சற்று தேங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!

மிக மிக கவனம் , தரையில் தண்ணீர் இருக்கும் போது பார்த்து நடக்கவும்!

அதிலும் வயதானவர்கள் இருந்தால், தரையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்து விட்டு, சன்னலை மட்டும் ஈரத்துணியோ அல்லது பாயோ கொண்டு கட்டவும்!
சன்னல் அவசியம் திறந்திருக்க வேண்டும்!

அப்போதுதான் ,வெளிக்காற்று , உள்ளே நமக்கு குளுமையைத் தரும்!

வீட்டின் மேலே மொட்டை மாடி இருந்தால் , அதிலும் தண்ணீர் தெளிக்க வேண்டும்! மாடியில் தண்ணீர் தெளிக்க , மாலை வேலை உகந்தது !

மற்ற படி, வீட்டில் தண்ணீர் தெளிக்க , சன்னலை ஈரத்துணியால், அடைக்க, காலை வேலை உகந்தது!

தண்ணீர் தெளிக்கும் பொது, வீட்டில் உள்ள FAN ஐ ,ஆப் செய்து விடுங்கள், சற்று நேரம்!

பிறகு , பேன் போட்டுக்கொள்ளலாம்!

இப்போது , உங்கள் இல்லம் , ஏசி இல்லாமலே, குளுகுளு வென இருக்கும்!

வெட்டி வேர் , சந்தனம் போன்றவற்றை சன்னலில் ஈரத்துணியுடன் சேர்த்துக்கட்ட, குளுமையுடன் , மனதிற்குப் புத்துணர்வையும் தரும்!

இந்த கோடையில் , குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் அதிக தண்ணீருக்கு எங்கே செல்வது என்று கேட்காதீர்கள், சன்னலுக்காவது, ஈரத்துணியை, பயன்படுத்தி, கோடை வெப்பத்திலிருந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

எளிய முறை தானே, செய்து பாருங்கள் ,
பலனைச் சொல்லுங்கள் உங்கள் சுற்றத்தார்க்கு!


No comments:

Post a Comment

Total Pageviews