Monday, November 18, 2013

இன்றைய நிஜம்!

இன்றைய நிஜம்!

கனவாகிப்போன நிஜத்தின் எச்சம்,
இன்னும் இருக்கிறது,
காய்ந்த விழிகளின் ஓரத்தில்,
கசந்த வாழ்வின்  தழும்புகளாக!

கனவுகளே, வாழ்க்கை என வாழும்,
எம் சகோதர சகோதரிக்கும்,
எல்லா உயிர்க்கும்,
நாளைய விடியல்
நன்மையாக அமைந்திட,

நல்லெண்ணங்களில், 
செயல்கள்  சிறந்திட,
என்றும் 
எண்ணங்களில் தூய்மைகொண்டு, 
வாழ்வோம்! நம்பிக்கையோடு !!!




No comments:

Post a Comment

Total Pageviews